புதன், 14 நவம்பர், 2012

'கடவுள்' மறுப்பு என்பது சரியான கோணம்தானா?

கடவுளை நம்புபவன் முட்டாள் !! - தமிழ்நாட்டின் fashion statement இது !

இதை படித்தவுடன் தோன்றுவது  ஒன்றுதான் .

ஒருவரை முட்டாள் என்று காறித்துப்பும் அதிகாரத்தை யார் கொடுத்தது ??  அப்படி சொல்வதனால் ஏற்படுகிற அறிவிலிதனத்தை என்ன செய்வது ???

இது கடவுளையும், மதத்தையும்  பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

கடவுள் என்பது நம்பிக்கை . அந்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட ஒரு சப்போர்ட் சிஸ்டம் தான் மதம்.

இதில் கடவுளுக்கு உருவம் இருக்கலாம். உருவம் இல்லாமல் இருக்கலாம். இயற்கையே கடவுளாகவும் இருக்கலாம்.

 மனிதனுக்கு ஏன் கடவுள் மீது இவ்வளவு காதல் ?

மனித வாழ்க்கையில் , தனியொரு மனிதனால் சமாளிக்கமுடியாத, சக மனிதர்களால் உதவி செய்து சரிபண்ண முடியாத துன்பங்கள் நேரும்போது , மனிதமனம் அதன் சக்திக்கு அப்பாற்ப்பட்டு ஒரு சக்தியை தேடுகிறது. அந்த மாதிரி ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறது. அந்த நம்பிக்கை தான் கடவுள்.

இந்த கடவுள் நேரில் வரவேண்டும் என்பதில்லை. இன்ப துன்பத்தில் உதவி செய்யவேண்டும் என்பது இல்லை. ஆனால், கடவுள் என்ற நம்பிக்கை மனிதனுக்கு, துன்பங்களை சமாளிக்கக்கூடிய , அதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியை, அதிலும் சக மனிதர்களால் அளிக்க முடியாத சக்தியை அளிக்கிறது. மனிதனைப் பொறுத்தவரையில், கடவுள் என்பது , அவனுடைய வாழ்க்கையின், மிக முக்கியமான தருணங்களில் பற்றுவதற்கான ஒரு பிடிமானம். ஒரு ஊன்றுகோல்.

அதை மறுப்பதும், வைத்துக் கொள்வதும் ஒவ்வொரு தனிப் பட்ட மனிதனுடைய சுதந்திரம். இதில் அடுத்தவர் அபிப்ராயம் கூறுவது என்பதை என்னவென்று கூறுவது ?

கடவுள் மறுப்பு என்பது இந்து நம்பிக்கைகளின் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு அம்சம். ஆனால்  கேள்வி,  ஒருவரின் கடவுள் நம்பிக்கையை ..அது ராமன், அல்லா , ஜீசஸ்  எதுவாக  இருந்தாலும் , முட்டாள்தனம் என்று அடுத்தவர் கூறுவது எந்த உரிமையில் ?? கடவுள் என்பது அதை  நம்பும் மனிதனுக்கு தேவையான நேரத்தில் பற்றிக்கொள்ளும் ஒரு ஊன்றுகோல் . அதை  கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது

கடவுள் என்பது தனிமனித நம்பிக்கை . மனிதனின் உளவியல் ரீதியிலான தேவை !

இதில் கடவுளுக்கு உருவம் இருக்கலாம். உருவம் இல்லாமல் இருக்கலாம். இயற்கையே கடவுளாகவும் இருக்கலாம்.

கடவுள் என்ற அந்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட ஒரு சப்போர்ட் சிஸ்டம் தான் மதம்.

இதில் தான் பிரச்சினை. வழிபாட்டு முறைகள் சக மனிதனை ஒதுக்கியோ, இழிவுபடுத்தியோ அல்லது ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்தியோ இருக்கும்போது , அங்கு கேள்வி எழுப்பப் படுகிறது.

அது வழிபாட்டு முறையின் மீதான கேள்விகளாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய , கடவுள் குறித்த கேள்விகளாக இருப்பது மிகவும் தவறு.

பகுத்தறிவு புரட்ச்சிக்கு பெயர்போன  தமிழ்நாட்டில் இன்று  மத நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. வழிபட்டுத்தலங்களின்  எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மத சடங்குகள் என்ற பெயரில் மனிதருக்கிடையிலான பாகுபாடுகளும், வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன.

பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் கடவுள் என்ற தனிமனித ஊன்றுகோலை பிடுங்குவது என்பது சமுதாய ஒழுக்ககேட்டிற்கு தான் வழி வகுக்கிறது.

கடவுள் self-discipline -காக  தனி மனிதன் தனக்கு தானே போட்டுக் கொள்ளும் கடிவாளம். எனவே எத்தனை பகுத்தறிவு புரட்ச்சியாலும்  மனிதனின் இந்த உளவியல் ரீதியிலான தேவையை நீக்கமுடியாது. மாறாக அது எதிர்மறையான சமூக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதனால் கடவுள் மறுப்பு என்பதை விட, கடவுளை  பொது வெளிக்கு அழைத்து வராமல் .அவரவருக்கான வீடு  என்கிற நாலு சுவற்றுக்குள் வைத்திருக்க சொல்வது நலம்.

கடவுளும் செக்ஸ் மாதிரிதான் . நாலு சுவற்றுக்குள் இருக்கும் வரை தான் அழகு.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

தர்மபுரி சம்பவம் ஜாதி வெறியின் உச்சம் !!!!


இந்த முறை வெறி பிடித்தது வன்னிய சமுதாயத்தினருக்கு !

இச் சம்பவம் தமிழ் நாட்டின் நிஜமுகத்தை, அதன் கோரமுகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது !


கொண்டாடப்படவேண்டிய ஒரு கலப்பு திருமணம் , 3 கிராமங்களை சேர்ந்த 148 தலித் வீடுகள் தீக்கிரையாவதர்க்கும், உயிர்பலிக்கும் காரணமாகி இருக்கிறது !


2 , 3 நாட்களுக்கு முன்னர் தான் 'பிராமணாள் கபே ' பெரிய புயலை கிளப்பியது

! தி.க.காரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கூட்டங்கள் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நல்லது ...!


ஆனால், தர்மபுரி சம்பவம் அதை விட கொடுமையான , கடுமையாக கண்டிக்கப் படவேண்டிய , தண்டிக்கப் படவேண்டிய ஒரு குற்றம் !


இதற்கு வன்னிய அமைப்புகள் என்ன வகையில் பொறுப்பேற்க போகின்றன ? வோட்டு வங்கிகளாக செயல்படும் இந்த அமைப்புகள் , இந்த மாதிரியான சமூக குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியது கட்டாயமாகிறது !


தி.க. காரர்கள் இதை எதிர்த்து சம்பவ இடத்திற்கு சென்று பொது கூட்டம் போடுவார்களா ? ஜாதிய வெறியை எதிர்த்து, அந்த பகுதி வன்னியர்களின் இந்த வெறியை எதிர்த்து, கடுமையான தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்களா??
வன்னிய மக்களின் பேரால் நடக்கும் அரசியல் கட்சிகள் இதற்கு பொறுபேற்க வேண்டுமல்லவா?
இங்கு ஜாதிய எதிர்ப்பு எனபது, மிகவும் போலியாக, பலனளித்து மக்கள் எந்த வகையிலும் அதிலிருந்து வெளியில் வந்து விடக் கூடாது என்ற கவனத்துடன் , பல ஜாதீய அமைப்புகளினாலும், கட்சிகளினாலும் நடத்தப் படுகிறது !!


ஜாதிய எதிர்ப்பு என்ற போர்வையில், ஜாதி வெறி தூண்டிவிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது !


பிராமணர்களை எதிர்ப்பது மட்டுமே ஜாதி எதிர்ப்பு அல்ல ! பெரியார் தன்னுடைய காலத்திலேயே அதை செய்து முடித்துவிட்டார். இனி எதிர்க்கப் படவேண்டியது மீதி இருக்கும் எண்ணிலடங்கா மற்ற ஜாதிகளும் தான் !
 

ஜாதியும், தமிழ் சமூகமும் !
 
இன்று தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் ஆழ்ந்து யோசிக்கப்படுவதில்லை ! சமூகப் பிரச்சினையானாலும் சரி, அரசியல் பிரச்சினையானாலும் சரி , அதன் மேல் அனைத்து பிரச்சினைகளையும் இணைத்து, தேவையில்லாத , சொல்லப்படாத கருத்துகளையும், அர்த்தங்களையும் அதன் மேல் பொருத்தி, புகுத்தி , அடிப்படையான அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி தேடாமல், வெறும் வாய் சவடால்களிலேயே நேரம் செலவிடப்படுகிறது !

கருத்து சுதந்திரம் என்பத
ற்கான அர்த்தம், புரிதல் இல்லாமல் மீறப்படுகிறது , மாற்றப்படுகிறது, திரிக்கப்படுகிறது !

ஜாதியை ஒழிப்பது என்பதை மறந்து , ஜாதி வெறி தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கிறது ! ஜாதி சங்கங்களும் , ஜாதி அமைப்புகளும், ஜாதியை கட்டிக்காப்பதில் தான் அக்கறையாக இருக்கிறார்களே தவிர , அடிப்படையான பிரச்சினையான அந்த ஜாதி என்கிற பிரிவினைவாதத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்கலாம் என்று யாரும் செயல்படுவதாக தெரியவில்லை !

இன்று ஜாதி என்பது ஒரு பெருமைக்குரிய அடையாளமாகவும், ஜாதி சங்கங்களும், அமைப்புகளும் அந்தந்த ஜாதிகளை காக்க வந்த அரண்களாகவும் பார்க்கப்படுகின்றன !

ஜாதியே வேண்டாம் , அதனால் ஏற்ப்படும் சமூகப் பிரிவினைகள் வேண்டாம் என்பதுதான் நம் நோக்கமாக இருக்கும்போது , அதற்க்கான ஆக்கபூர்வ செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல், ஜாதியை அரசியலாக்கி அதில் பேரும், புகழும், தனி மனித செல்வாக்கும் ஏற்படுத்திகொள்வதிலும், ஜாதியை வோட்டுவங்கிகளாக பயன்படுத்துவதிலுமாக நம் சமூகம் சீரழிந்து கொண்டு இருக்கிறது !

இரு ஜாதிக்காரர்களை மோத விட்டு , எந்த பிரச்சினையையும் பேசாமல் தப்பிவிடலாம் !

இன்று பார்ப்பனனாக இருந்தால் பிரச்சினை ! தலித்தாக இருந்தால் பிரச்சினை ! வன்னியர், தேவர் என்று எதுவாக இருந்தாலும் பிரச்சினை தான் ! இது போதாதென்று , நாய்டு, நாயர் என்று வேறு !

ஜாதி, மதம் , இனம் என்று மிகப் பெரிய பூதங்களின் வாயில் தமிழ் சமூகம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறது !

மக்களுக்கு பிடித்தது இரண்டு ! ஒன்று படிப்பது . இன்னொன்று சினிமா. இங்கு எழுத்தாளர்கள் ஜாதி அரசியல் செய்கிறார்கள் ! சினிமாவிலும் அதுதான் !

இங்கு , அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் மக்களை யோசிக்க விடாமல் மழுங்கடிக்கும் வேலை நடந்துகொண்டு இருக்கிறது !

சரியான தலைவர்கள் இல்லை ! மக்களை யோசிக்க வைக்க வேண்டியவர்கள் யார் ?

நாம் எங்கே போகிறோம் ????